28 நாட்களுக்கு பிறகு' மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர்

28 நாட்களுக்கு பிறகு' மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர்

உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன். உங்கள் அன்பு விலைமதிப்பில்லாதது’ என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

புகழ்பெற்ற பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த  நவம்பர் 11 ஆம் தேதி நிமோனியாவால் பாதிக்கப்பட்ட  நிலையில் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

28 நாட்களுக்கு பிறகு' மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர்

இந்நிலையில் சுமார்  28 நாட்களுக்குப் பிறகு லதா மங்கேஷ்கர் சிகிச்சை முடிந்து நேற்று  வீடுதிரும்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,  ‘கடந்த 28 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நிமோனியாவால் பாதிப்படைந்த என்னை, உடல் நலம் தேறியபிறகு மருத்துவர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தினர்.

அதனால்  தற்போது வீடு திரும்பிவிட்டேன். எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. உங்களால் தான் நான் மீண்டு வந்துள்ளேன். எனக்கு மருத்துவம் பார்த்த  மருத்துவர்கள் அனைவரும் எங்கள தேவதைகள்  போல தெரிந்தார்கள். செவிலியர்களின் சேவை பாராட்டுக்குரியது. எப்போதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன். உங்கள் அன்பு விலைமதிப்பில்லாதது’ என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். 

Share this story