3வது முறையாக இணையும் அஜீத் – வினோத் கூட்டணி… புதிய அப்டேட்…

3வது முறையாக இணையும் அஜீத் – வினோத் கூட்டணி… புதிய அப்டேட்…

நடிகர் அஜீத் – எச்.வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைவது குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

‘சதுரங்கவேட்டை’ என்ற வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் ஹெச்.வினோத். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கினார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் பெரிய பாராட்டை பெற்றது. அதன்பிறகு இந்தியில் வெற்றிப்பெற்ற ‘பிங்க்’ படத்தை அஜீத்துடன் கூட்டணி அமைத்து இயக்கினார். ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது.

3வது முறையாக இணையும் அஜீத் – வினோத் கூட்டணி… புதிய அப்டேட்…

இதையடுத்து ‘வலிமை’ படத்தின் மூலம் அஜீத் – வினோத் கூட்டணி மீண்டும் இணைந்தது. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் 95 சதவீத பணிகள் நிறைவுபெற்று விட்டன. மே 1ம் தேதி ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு ஆயத்தமாகி வந்தநிலையில் கொரானா காரணமாக, இதன் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அஜீத் ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளனர்.

3வது முறையாக இணையும் அஜீத் – வினோத் கூட்டணி… புதிய அப்டேட்…

இந்நிலையில் அஜீத் அடுத்த படத்தையும் வினோத் தான் இயக்கப்போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ‘வலிமை’ படப்பிடிப்பின்போது இயக்குனர் வினோத், அஜீத்திடம் தனது ஒன்லைன் கதையை சொல்லியிருக்கிறார். அந்த கதை அஜித்துக்குப் பிடித்துப் போக, இதையே அடுத்தப் படமாக எடுக்கலாம் என உறுதியளித்தாராம். இதனால் மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தையும் போனி கபூர்தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story