75% செயலிழந்த கல்லீரல்: மொத்த சொத்தையும் இரண்டாக பிரிக்க முடிவு செய்த நடிகர் அமிதாப் பச்சன்

75% செயலிழந்த கல்லீரல்: மொத்த சொத்தையும் இரண்டாக பிரிக்க முடிவு செய்த நடிகர் அமிதாப் பச்சன்

கல்லீரல் பிரச்னையால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் அமிதாப் தொடர்ந்து சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார்  அமிதாப் பச்சன். இவருக்கு தற்போது 76 வயதாகிறது. கடந்த 1982-ஆம் ஆண்டு  நடிகர் அமிதாப் பச்சன் விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்கு ரத்தம் தேவைப்பட்டது. இதற்காக அவருக்கு புதிய ரத்தம் ஏற்றப்பட்டது. ஆனால்  அந்த ரத்தத்தில்  ஹெப்பாடிட்டீஸ் பி வைரஸ் இருந்துள்ளது.  இதன் காரணமாக நாளடைவில் அவரது  கல்லீரல் 75 சதவீதம் செயலிழந்தது. கல்லீரல் பிரச்னையால்  தொடர்ந்து அவதிப்பட்டு வரும்  அமிதாப் தொடர்ந்து சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று  வருகிறார்.

75% செயலிழந்த கல்லீரல்: மொத்த சொத்தையும் இரண்டாக பிரிக்க முடிவு செய்த நடிகர் அமிதாப் பச்சன்

இந்நிலையில் நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகி கொண்டே போவதால், தனது சொத்துக்களை மகனுக்கும், மகளுக்கும் சமமாக பிரித்து கொடுக்க முடிவுசெய்துள்ளார். அமிதாப் பச்சனுக்கு, மகன் அபிஷேக் மகள் சுவேதா என இருவர் உள்ள நிலையில், தனக்கு சொந்தமான சுமார் ரூ.2 ஆயிரத்து 800 கோடி சொத்துகளைப்  பாலின  வேறுபாடின்றி சரிசமமாகப் பிரித்துக் கொடுக்க  விருப்பம் தெரிவித்துள்ளாராம். 

ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமிதாப் பச்சன், தனது சொத்துகளுக்கு மகன் அபிஷேக் மட்டும் உரிமை கோர முடியாது  என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Share this story