9 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்… ரசிகர்கள் மீதான தீராக்காதலே அஜித்தின் திருப்பத்திற்கு காரணம்!!

9 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்… ரசிகர்கள் மீதான தீராக்காதலே அஜித்தின் திருப்பத்திற்கு காரணம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் அன்பாக தல என்று அழைக்கப்படும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவரின் சின்ன நகர்வைக்கூட இணையத்தில் வைரலாகி வருகின்றனர். இவரின் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பாத்து காத்திருக்கும் நாள் அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்று. தல அஜித் இந்தாண்டு தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கிறார். அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவரது ரசிகர்கள் ஒருவாரத்திற்கு முன்பே ஆரம்பித்து விட்டனர். ட்விட்டரில் ஹேஷ்டாக்குகளை தெறிக்கவிட்டு வருகின்றனர். எப்பவுமே ஆரவாரமில்லாமல் தனது குடும்பாத்தாருடன் பிறந்த நாள் கொண்டாடுவர் அஜித். ஆனால் அவரது ரசிகர்கள் மே.1 ஆம் தேதியை திருவிழா போல கொண்டாடுவர்.  மே 1 ஆம் தேதி என்றால் அஜித் படம் ஸ்பெஷல் காட்சிகளாக ரிலீஸாகும். பேனர்கள், போஸ்டர்கள், நலத்திட்ட உதவி என தல ரசிகர்கள் பட்டையக் கிளப்பிவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா மற்றும் ஊரடங்கால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

9 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்… ரசிகர்கள் மீதான தீராக்காதலே அஜித்தின் திருப்பத்திற்கு காரணம்!!

இந்நேரத்தில் அஜித்திற்கும், அவரது ரசிகர்களுக்கும் மறக்கமுடியாத பிறந்த நாள் கொண்டாட்டம் என்றால் அவரது 40 ஆவது பிறந்த நாள். அப்போது நடிகர் அஜித் எடுத்த முக்கிய முடிவு இன்றளவும் அவரது ரசிகர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்று. அதாவது அதாவது கடந்த 2011-ஆம் ஆண்டில், அஜித் தனது 40-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.  பிறந்தநாளுக்கு 2 நாள் முன்பாக, அவரிடமிருந்து முக்கிய அறிக்கை ஒன்று வெளியானது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த அந்த அறிக்கை, இறுதியில் அதிர்ச்சியையே கொடுத்தது.

9 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்… ரசிகர்கள் மீதான தீராக்காதலே அஜித்தின் திருப்பத்திற்கு காரணம்!!

அந்த அறிக்கையில், “நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக அவர்களை, கேடயமாக பயன்படுத்தியதுமில்லை, பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால், அதற்கு ஆதரவு தரவும், இல்லாவிட்டால் அதனை விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமையுண்டு. எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் அனைவருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன்.. என் ரசிகர்களிடையே இக்காரணத்தைக்கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை- பார்க்கவும் மாட்டேன். கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டிற்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை.

9 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்… ரசிகர்கள் மீதான தீராக்காதலே அஜித்தின் திருப்பத்திற்கு காரணம்!!

சமுதாய பணிகளில் ஈடுபடுவது கூட, யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும், என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நலதிட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம், நல் உள்ளமும் எண்ணமும் போதும் என்பதே என் கருத்து. வருகிற மே.1 ஆம் தேதி என்னுடைய நாற்பதாவது பிறந்தநாளில் எனது கருத்தை எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்று முதல் எனது தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன். எனது இந்த முடிவுக்கு ஆதரவளிக்கும் உண்மையான ரசிகர்களின், கருத்து மட்டுமே எனது பிறந்தநாள் பரிசாகும்” என குறிப்பிட்டிருந்தார். 

எவ்வளவு உயரத்திற்கு போனாலும், தங்களை பற்றிய பேச்சும், ஆரவாரமும் சுற்றி இருக்க வேண்டும் என நினைக்கும் நடிகர்களுக்கு மத்தியில் தனித்து நிற்க விரும்பிய அஜித், உண்மையில் இப்படி ஒரு முடிவை எடுக்க காரணம் என்ன என்பது இன்றும் புரியாத புதிராக இருக்கிறது. ரசிகர்களின் ஆரவாரம் ஒவ்வொரு நடிகருக்கும் உந்துதலாக கூட இருக்கலாம். ஆனால் இந்த கருத்திலிருந்து தனித்து நிற்கிறார் அஜித். இதனாலோ என்னவோ அஜித்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. 

9 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்… ரசிகர்கள் மீதான தீராக்காதலே அஜித்தின் திருப்பத்திற்கு காரணம்!!
உண்மையில் அஜித்திற்கு ரசிகர்கள் என்றால் கொள்ளை பிரியம். அதற்கு உதாரணங்கள் நிறையவுள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்வரை மாவட்டந்தோறுமுள்ள ரசிகர்களை சந்திப்பது, அவர்களுக்கும் அவர்களது கிராமத்திற்கும் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்குவது போன்ற செயல்களில் நடிகர் அஜித் ஈடுபட்டுவந்தார். குறிப்பாக ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் கலாச்சாரத்திற்கு அச்சாரமிட்டவரே அஜித் தான். ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள ரசிகர்களை தனித்தனியாக சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்வார். இன்று ரசிகர்கள் மட்டுமல்ல, அஜித்தின் எண்ண ஓட்டத்திலும் இத்தகைய பசுமையான நினைவுகள் சுழன்றுக்கொண்டுதான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை…

Share this story