பிக்பாஸ் வின்னரானதும் அடிக்கும் வாய்ப்பு… போலீசாக நடிக்கும் ‘ஆரி’

பிக்பாஸ் வின்னரானதும் அடிக்கும் வாய்ப்பு… போலீசாக நடிக்கும் ‘ஆரி’

பிக்பாஸ் வின்னர் ஆரி, புதிய த்ரில்லர் படத்தில் போலீசாக நடிக்கிறார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் நடிகர் ஆரி டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது நிதானமான விளையாட்டால் ஆரி வெற்றிப்பெற்றார்.

பிக்பாஸ் வின்னரானதும் அடிக்கும் வாய்ப்பு… போலீசாக நடிக்கும் ‘ஆரி’

இந்த நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் ஆரிக்கு படவாய்ப்பு குவிந்து வருகிறது. நெடுஞ்சாலை படம் மூலம் தமிழ் திரையுலகின் கவனத்தை ஈர்த்த ஆரி, ஆடும் கூத்து, ரெட்டச்சுழி, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் வின்னரானதும் அடிக்கும் வாய்ப்பு… போலீசாக நடிக்கும் ‘ஆரி’

இந்நிலையில் ஆரி புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். புதுமுக இயக்குனர் அபின் இயக்கும் இந்தப் படத்தில் ஆரி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சென்னையில் இன்று இப்படத்தின் பூஜை தொடங்கியது. இதில் பிரபல இயக்குனர் முருகதாஸ் கலந்துகொண்டார்.

பிக்பாஸ் வின்னரானதும் அடிக்கும் வாய்ப்பு… போலீசாக நடிக்கும் ‘ஆரி’

கிரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் ஆரிக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்கிறார். நடிகர் முனீஷ்காந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, திண்டுக்கல் இடங்களில் நடைபெறுகிறது. பி.வி.கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ஜுனியர் ஸ்டெர்லின் நித்தியா இசையமைக்கிறார்.

Share this story