ஆரி “டைட்டில் வின்னரா” ? உடையும் பிக்பாஸ் ரகசியம்…

ஆரி “டைட்டில் வின்னரா” ?   உடையும் பிக்பாஸ் ரகசியம்…

அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பதால், நடிகர் ஆரி தான், ‘டைட்டில் வின்னர்’ என சமூகவலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.

கடந்த அக்டோபர் மாதம் முதல் பிக்பாஸ் 4 தொடங்கிய நடைபெற்று வருகிறது. எவ்வளவு பிரச்சனை, சண்டைகள் என இருந்த பிக்பாஸ் 4, இன்றுடன் முடிவு பெறுகிறது. பிக்பாஸ் ஃபினாலே வாரமான இதில் டைட்டில் வின்னர் யாரென்று தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

ஆரி “டைட்டில் வின்னரா” ?   உடையும் பிக்பாஸ் ரகசியம்…

18 போட்டியாளர் பங்கேற்ற பிக்பாஸ் 4ல் இன்றுவரை அதிக மக்கள் செல்வாக்கு பெற்றவர் ஆரி. நேர்மையானவராகவும், யார் மனதையும் புன்படுத்தாமலும் இருந்து வருகிறார். நிதானம் தவறாமல் இருந்து வரும் ஆரி, சக ஹவுஸ்மேட்டுகள் எவ்வளவு தொல்லைக் கொடுத்தாலும், அதை அமைதியாக கையாள்கிறார்.

ஆரி “டைட்டில் வின்னரா” ?   உடையும் பிக்பாஸ் ரகசியம்…

ஹவுஸ்மேட்டுகளுடன் எந்த பிரச்சனையானாலும் நேருக்குநேர் நின்று பேசி தீர்த்த்துக்கொள்கிறார். இதனால் பொதுமக்கள் மத்தியில் நடிகர் ஏகப்பட்ட செல்வாக்கு என்றே சொல்லவேண்டும். ஆரியின் இந்த நடவடிக்கை மத்த ஹவுஸ்மேட்டுகளின் குடும்பத்தினரை கூட ரசிக்க வைத்துள்ளது.

ஆரி “டைட்டில் வின்னரா” ?   உடையும் பிக்பாஸ் ரகசியம்…

இதனால் ஆரிக்கு தான் பிக்பாஸ் டைட்டில் கொடுக்கவேண்டும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். வாக்கு செலுத்த கடைசி நாளாக நேற்றுவரை, அதிக வாக்குகளை ஆரிக்கு அள்ளி வீசி வருகின்றனர் ரசிகர்கள்.

இன்று கிராண்ட் ஃபினாலே என்பதால் ஆரிக்குதான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் வாக்கு சதவீதம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஆரி 23 கோடி வாக்குகள் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ரன்னர் அப் நான்கரை கோடியும், இரண்டாவது ரன்னர் 4கோடியும், மூன்றாவதாக ரம்யா பாண்டியன் 3.7கோடியும், சோம் 3.2கோடியும் வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வரலாற்றில் ஆரிக்குதான் இவ்வளவு வாக்கு சதவீதம் ரசிகர்கள் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று மாலை பிக்பாஸ் ஃபினாலே ஹூட்டிங் நடைபெறவிருப்பதால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

Share this story