அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை… நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அப்புக்குட்டி!

அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை… நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அப்புக்குட்டி!

நடிகர் அப்புக்குட்டி பொருளாளராக ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் திரைத்துறையிலிருந்து நிதி உதவி பெற எதிர்பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் அப்புக்குட்டி சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றார். மேலும் அந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றார்.

அதையடுத்து அஜித் உடன் ‘வீரம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடைசியாக மாதவன் நடிப்பில் வெளியாகியிருந்த ‘மாறா’ படத்தில் நடித்திருந்தார்.

அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை… நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அப்புக்குட்டி!

சமீபத்திய தகவலின்படி, அப்புக்குட்டி கொரோனா சூழல் காரணமாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அப்புக்குட்டி விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். சென்னை சாலிகிராமத்தில் வாடகைக்கு குடியிருந்த அப்புக்குட்டி, பொருளாதார சிக்கல் காரணமாக தற்போது சென்னை புறநகர்ப்பகுதியான கோவூருக்கு குடிபெயர்ந்துவிட்டாராம்.

தற்போது மீண்டும் திரைத்துறை முடங்கியுள்ளதால் கடும் நிதி நிலைமைக்கு அவர் ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அப்புக்குட்டி தன் குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூட முடியாமல் தவித்து வருவதாகவும் தனது நண்பர்களிடமிருந்தோ அல்லது திரைத்துறை நபர்கள் மூலமாகவோ தேவையான உதவி கிடைக்கும் என்று நம்பியிருக்கிறாராம்.

Share this story