கொரானா தொற்றுக்கு ஆளான அதர்வா… வீட்டு தனிமையில் இருப்பதாக ட்வீட்…
கொரானா தொற்று காரணமாக நடிகர் அதர்வா வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நடிகர் அதர்வாவின் நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவான திரைப்படம் “100”. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இருவரும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். பிரமோத் பிலிம்ஸ் சார்பாக ஸ்ருதி நல்லப்பா தயாரித்து வரும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு கிருஷ்ணன் வெங்கட் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.
இணையதள குற்றங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கியது. இந்த படத்தில் நடிப்பதற்காக சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வந்தார் அதர்வா. ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சமீபத்தில் ஒரு ஆக்சன் காட்சியைப் படமாக்கியிருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் ஷூட்டிங் நேற்றுமுன்தினம் முடிவுற்றது. தற்போது தயாரிப்பு பணிகள் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் அதர்வாவுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், எனக்கு கொரானா தொற்றிற்கான சிறிய அளவிலான அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தேன். அதில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டு தனிமையில் இருந்து வருகிறேன். விரைவில் பூரண குணமடைந்து பணிகளில் கவனம் செலுத்துவேன் என அவர் பதிவிட்டுள்ளார்.