மத்தவங்க மேல அக்கற இருக்குறவங்க தடுப்பூசி போட்டுக்கணும்… நடிகர் கமல்ஹாசன் அறிவுரை!

மத்தவங்க மேல அக்கற இருக்குறவங்க தடுப்பூசி போட்டுக்கணும்… நடிகர் கமல்ஹாசன் அறிவுரை!

நடிகர் கமல்ஹாசன் இன்று ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அசைத்துவிட்டது இந்தக் கொரோனா என்னும் பெருந்தொற்று. லட்சக்கணக்கான மக்களின் உயிரையும் பறித்தது. தற்போது உலகம் அதன் பிடியிலிருந்து தப்பி மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

மத்தவங்க மேல அக்கற இருக்குறவங்க தடுப்பூசி போட்டுக்கணும்… நடிகர் கமல்ஹாசன் அறிவுரை!

நாடு முழுவதும் சுகாதாரை மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதையடுத்து 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும், 45 வயதுக்கு மேல் வேறு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் தடுப்பூசி போடத் துவங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரதமர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து தற்போது நடிகர் கமல்ஹாசன் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story