இது எல்லாமே அங்கிருந்துதான் தொடங்கியது… கார்‌ வாங்கியது குறித்து மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சி…

இது எல்லாமே அங்கிருந்துதான் தொடங்கியது… கார்‌ வாங்கியது குறித்து மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சி…

புதிய கார் வாங்கியது குறித்து நடிகர் மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சி கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இது எல்லாமே அங்கிருந்துதான் தொடங்கியது… கார்‌ வாங்கியது குறித்து மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சி…

பல ஆண்டுகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் மாஸ்டர் மகேந்திரன். இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து இதுவரை 100 திரைப்படங்கள் வெளி வந்துள்ளன. ‘நாட்டாமை’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர்‌ பெரும்பாலும் இயக்குனர் பாண்டிராஜ் படத்தில்தான் நடித்துள்ளார். ‘தாய் குலமே தாய் குலமே’, ‘கும்பகோணம் கோபாலு’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும்‌ பெற்றுள்ளார்.

இது எல்லாமே அங்கிருந்துதான் தொடங்கியது… கார்‌ வாங்கியது குறித்து மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சி…

இதைத்தொடர்ந்து ‘விழா’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு ‘விந்தை’, ‘விரைவில் இசை’, ‘திட்டிவாசல்’,’நாடோடி கனவு’,நம்ம ‘ஊருக்கு என்னதான் ஆச்சு’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.ஆனால் அந்த திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை. 30 ஆண்டுகள் போராடியும் ஹீரோவாக புகழ்பெறாமலே இருந்தார்.

இது எல்லாமே அங்கிருந்துதான் தொடங்கியது… கார்‌ வாங்கியது குறித்து மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சி…

இதையடுத்து விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் குட்டி பவானியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.இந்நிலையில், புதிய கார் ஒன்றை மாஸ்டர் மகேந்திரன் வாங்கி உள்ளார். இந்த காரின் சாவியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையால் பெற்றுக்கொண்டார்.

இது எல்லாமே அங்கிருந்துதான் தொடங்கியது… கார்‌ வாங்கியது குறித்து மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சி…

இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், புதிய வாழ்க்கை, புதிய பயணம், புதிய கார், இது எல்லாம் மாஸ்டர் படத்திலிருந்து தொடங்கியது என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story