நடிகர் ப்ரித்விராஜுக்கு கொரோனா உறுதி!
பிரபல மலையாள நடிகர் ப்ரித்வி ராஜா கொரோனா தொற்றால் பாதிப்பட்டுள்ளார்.
பிரித்விராஜ் தனது அடுத்த படமான ‘ஜன கண மன’ படத்தின் பட்டப்படிப்பில் கலந்துகொண்ட போது அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“எல்லோருக்கும் வணக்கம்! அக்டோபர் 7 ஆம் தேதி முதல் டிஜோ ஜோஸ் அந்தோனி இயக்கும் “ஜன கண மன” படப்பிடிப்பில் கலந்து வருகிறேன். கொரோனா விதிமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எங்கள் படக்குழு கவனமாக இருந்தோம். விதிமுறைப்படி, படப்பிடிப்புக்கு சம்பந்தப்பட்ட அனைவருமே படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே சோதிக்கப்பட்டனர், நாங்கள் வைத்திருந்த நீதிமன்ற அறை தொகுப்பில் கடைசி நாள் படப்பிடிப்புக்குப் பிறகு, சோதனைகள் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, இந்த முறை சோதனை முடிவுகளில் தொற்று உறுதியாகியது. நான் தனிமையில் சென்றுவிட்டேன். எனக்கு எந்த வித அறிகுறியும் காணப்படவில்லை. இப்போது நன்றாக இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன. விரைவில் குணமடைந்து விரைவில் ASAP வேலைக்கு வருவேன் என்று நம்புகிறேன். அன்பு மற்றும் அக்கறைக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுதும் மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது பிரித்விராஜ் ஆடுஜீவிதம் படத்திற்காக ஐக்கிய அமீரகத்தில் இருந்தார். பின்னர் அந்தப் படக்குழு இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். அதையடுத்து அரசிடம் கோரிக்கை வைத்து தனி விமானம் மூலம் இந்தியா திரும்பியது குறிப்பிடத்தக்கது.