மாஸ்.. கொலை மாஸ்… சிம்புவுடன் இணைகிறதா பிரபல நிறுவனம்… அடுத்த படத்தின் சந்திப்பா ?

மாஸ்.. கொலை மாஸ்… சிம்புவுடன் இணைகிறதா பிரபல நிறுவனம்… அடுத்த படத்தின் சந்திப்பா ?

பிரபல பட தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்.. கொலை மாஸ்… சிம்புவுடன் இணைகிறதா பிரபல நிறுவனம்… அடுத்த படத்தின் சந்திப்பா ?

சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வருகிறது ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அரசியல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. விரைவில் ரிலீசாக உள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மாஸ்.. கொலை மாஸ்… சிம்புவுடன் இணைகிறதா பிரபல நிறுவனம்… அடுத்த படத்தின் சந்திப்பா ?

இந்த படத்தையடுத்து ‘ஜில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை துவங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிம்பு நடிக்கவிருக்கிறார். ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷ்னல் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொக்ஷனின் ரவீந்திரன், நடிகர் சிம்புவை சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், நாங்கள் இருவரும் பொதுவான விஷயங்களுக்காக அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம் என்று கூறியுள்ளார். அதோடு சிம்புவை வர்ணித்து சில வரிகளையும் பதிவிட்டுள்ளார். சிம்புவுடன் அவர் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வேளையில், இருவரும் புதிய படத்தில் இணைகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சந்திப்பு சிம்புவின் அடுத்த படம் குறித்து சந்திப்பாக இருக்கலாம் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story