‘மாநாடு’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஒத்திவைப்பு..காரணம் இதுதான்!

‘மாநாடு’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள்  ரிலீஸ் ஒத்திவைப்பு..காரணம் இதுதான்!

‘மாநாடு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் திட்டமிட்டப்படி வெளியாகாது என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

‘மாநாடு’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள்  ரிலீஸ் ஒத்திவைப்பு..காரணம் இதுதான்!

சிம்புவின் நடிப்பில் அரசியல் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும், எஸ் ஏ சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

‘மாநாடு’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள்  ரிலீஸ் ஒத்திவைப்பு..காரணம் இதுதான்!

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் சில காட்சிகளை எடுக்க மாலத்தீவுக்கு படக்குழுவினர் சென்றிருந்தனர். அங்கு சிம்பு‌-கல்யாணி இணைந்து நடிக்கும் அழகிய பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. இதோடு மாலத்தீவு ஏர்போர்ட்டில் ஒரு காட்சியை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் கொரானா 2வது அலை காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டு சென்னை திரும்பினர் படக்குழுவினர்.

‘மாநாடு’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள்  ரிலீஸ் ஒத்திவைப்பு..காரணம் இதுதான்!

தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘மாநாடு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் ராமஜான் பண்டிகையொட்டி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் சொன்ன தேதியில் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியிடுவதை தற்காலிக ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தயார் மறைவையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,இன்னொரு தேதியில் first’sigle வெளியிடுவோம். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். நண்பர்களின் துக்கத்தில் பங்குகொள்வோம்.கொண்டாட்டத்தையும் தாண்டி கவனமாக இருங்கள். விரைந்து மீள்வோம் என‌ தெரிவித்துள்ளார்.

Share this story