சிம்புவின் ‘மாநாடு’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் எப்போது ? வெளியானது முக்கிய அப்டேட் !

சிம்புவின் ‘மாநாடு’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் எப்போது ? வெளியானது முக்கிய அப்டேட் !

‘மாநாடு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீசாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவின் ‘மாநாடு’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் எப்போது ? வெளியானது முக்கிய அப்டேட் !

சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் அரசியல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மாநாடு’. இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக மலையாள நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும், எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சிம்புவின் ‘மாநாடு’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் எப்போது ? வெளியானது முக்கிய அப்டேட் !

எஸ்.ஜே.சூர்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு இந்த படத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்புக்கு கம்பேக் கொடுக்கும் படமாக இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரானா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சிம்புவின் ‘மாநாடு’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் எப்போது ? வெளியானது முக்கிய அப்டேட் !

இதற்கிடையே ‘மாநாடு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் ரமலான் பண்டிகையொட்டி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தயார் மறைவையொட்டி ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியிடுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஜூன் 21ம் தேதி ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்படும் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Share this story