“என் வாழ்நாளில் மிக முக்கிய தருணம்” – நடிகர் சூரி உருக்கம்…

“என் வாழ்நாளில் மிக முக்கிய தருணம்” – நடிகர் சூரி உருக்கம்…

இளையராஜா ஸ்டுடியோவில் எங்கள் படத்தின் பாடல் பதிவு தொடங்கியது, என் வாழ்நாளில் மிகவும் முக்கியமான தருணம் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

“என் வாழ்நாளில் மிக முக்கிய தருணம்” – நடிகர் சூரி உருக்கம்…

பிரசாத் ஸ்டுடியோவுடனான பிரச்சனையையடுத்து, புதிய ஸ்டுடியோ ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்த இளையராஜா, கோடம்பாக்கத்தில் புதிதாக இடத்தை வாங்கி ஸ்டுடியோ கட்ட தொடங்கினார். எம்.எம்.பிரிவியூ தியேட்டர் இருந்த இடத்தில் இந்த ஸ்டுடியோ கட்டப்பட்டுள்ளது. பணிகள் இன்னும் முழுவதும் முடியாத நிலையிலும் இன்று தனது ஸ்டுடியோவை திறந்து வைத்தார் இளையராஜா.

“என் வாழ்நாளில் மிக முக்கிய தருணம்” – நடிகர் சூரி உருக்கம்…

இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் இசைப்பணிகளை இன்றே ஆரம்பித்தார் இளையராஜா. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் பாரதிராஜா, விஜய் சேதுபதி, வெற்றிமாறன், சூரி மற்றும் திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இது குறித்து நடிகர் சூரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஐயா இசையின் ராஜா இளையராஜா, வெற்றிமாறன் அண்ணன் மற்றும் மாமா விஜய்சேதுபதி ஆகியோருடன் இன்று வெற்றிமாறன் இயக்கும் எங்கள் படத்தின் பாடல் பதிவு துவங்கியது. “என் வாழ்நாளில் மிகவும் முக்கியமான தருணம்’’ என்று அந்த பதிவில் உருக்கமான தெரிவித்துள்ளார்.

Share this story