என் மகன கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னாங்க… ஷாக் ஆயிட்டேன்… ப்ரியாமணி ஓபன் டாக்!

என் மகன கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னாங்க… ஷாக் ஆயிட்டேன்… ப்ரியாமணி ஓபன் டாக்!

நடிகர் தருணின் நடிகர் அம்மா, தனது மகனைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதாகப் பிரியாமணி தெரிவித்துள்ளார்.

நடிகை ப்ரியாமணி பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படம் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து பாலு மகேந்திரா, மணிரத்னம் ஆகிய பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். அது ஒரு கனாக்காலம், தோட்டா, மலைக்கோட்டை, ஆறுமுகம், ராவணன் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

என் மகன கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னாங்க… ஷாக் ஆயிட்டேன்… ப்ரியாமணி ஓபன் டாக்!

தற்போது நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ப்ரியாமணி தன்னுடன் நடித்த நடிகர் தருணின் அம்மா தன்னிடம் அந்த ஹீரோவைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

ப்ரியாமணி 2005 ஆம் ஆண்டில் ‘நவ வசந்தம்’ என்ற படத்தில் தருண் என்ற நடிகருடன் நடித்தார். அப்போது ப்ரியாமணிக்கும் தருணுக்கும் இடையே காதல் இருப்பதாக செய்திகள் பரவியது.

தருண் தமிழில் புன்னகை தேசம், உனக்கு 20 எனக்கு 18 உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

“ஒரு நாள், தருண் அம்மா ரோஜா ரமணி வந்து என்னிடம் சிறிது நேரம் பேசினார். நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீ விரும்பினால், என் மகன் தருணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர் அப்படி கேட்டது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

என் மகன கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னாங்க… ஷாக் ஆயிட்டேன்… ப்ரியாமணி ஓபன் டாக்!

ஆனால் பின்னர் தருண் அவரது அம்மாவிடம் எங்கள் இருவருக்கும் இடையே நட்பு தான் காதல் அல்ல என்று கூறி புரிய வைத்தார்.

பிரியாமணி 2017 ஆம் ஆண்டில் முஸ்தாஃப் ராஜ் என்பவரைத் திருமணம் செய்தார். தற்போது ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ‘நாரப்பா’வில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Share this story