தனுஷ் பட நாயகிக்கு கொரானா… வீட்டு தனிமையில் சிகிச்சை…

தனுஷ் பட நாயகிக்கு கொரானா… வீட்டு தனிமையில் சிகிச்சை…

பிலபல மலையாள நடிகை ஐஸ்வர்ய லஷ்மிக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதால் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனுஷ் பட நாயகிக்கு கொரானா… வீட்டு தனிமையில் சிகிச்சை…

இந்தியாவில் கொரானாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகளை கையாண்டு வருகிறது அரசு. இதற்காக முன்பு இருந்த மாதிரி புதிய காட்டுபாடுகளை மக்கள் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதோடு தடுப்பூசி போடும் பணியையும் தூரிதப்படுத்தப்பட்டுள்ளது. கொரானாவின் வீரியம் இன்னும் அதிகரித்தால் இரவு ஊரடங்களை அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தனுஷ் பட நாயகிக்கு கொரானா… வீட்டு தனிமையில் சிகிச்சை…

இந்த கொரானா தொற்றுக்கு பிரபலங்களும் விதிவிலக்கல்ல. அதனால் எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் கூட தொற்றின் பாதிப்பு பிரபலங்களை விடுவதில்லை. இந்த வகையில் ஏற்கனவே மாதவன், நிவேதா தாஸ், கவுரி கிஷன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்த விஷயம்.

தனுஷ் பட நாயகிக்கு கொரானா… வீட்டு தனிமையில் சிகிச்சை…

இந்த வரிசையில் பிரபல மலையாள ஐஸ்வர்ய லஷ்மி பாதிக்கப்பட்டுள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ள இவர், உடல்நல குறைவு ஏற்பட்டு கொரானா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். இவர் விஷால் ஆக்‌ஷன், தனுஷின் ஜெகமே தந்திரம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story