எனது மனநிலை பற்றி யாரும் கவலைப்படவில்லை… மனம் திறந்த அமலா பால்…

எனது மனநிலை பற்றி யாரும் கவலைப்படவில்லை…  மனம் திறந்த அமலா பால்…

விவாகரத்து நேரத்தில் எனது மனநிலை பற்றி யாரும்‌ கவலைப்படவில்லை என நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

எனது மனநிலை பற்றி யாரும் கவலைப்படவில்லை…  மனம் திறந்த அமலா பால்…

‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ‌அமலா பால். ‘மைனா’ திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தை பெற்றார்.பின்னர் நடிப்பில் வெளிவந்த மைனா, வேட்டை, தெய்வ திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

எனது மனநிலை பற்றி யாரும் கவலைப்படவில்லை…  மனம் திறந்த அமலா பால்…

திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பிறகு படவாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். இதையடுத்து ஆடை ,அதோ அந்த பறவை போல ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதுதவிர வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

எனது மனநிலை பற்றி யாரும் கவலைப்படவில்லை…  மனம் திறந்த அமலா பால்…

இந்நிலையில் திருமண பிரிவுக்கான காரணம் குறித்து இரு தரப்பினரும் வெளிப்படையாக ஏதும் சொல்லாதநிலையில் இது குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அமலா பால். அதில் நான் விவகாரத்து செய்ய முற்பட்டபோது என்னை யாரும் ஆதரிக்கவில்லை. அனைவரும் என்னை பயமுத்தவே முயற்சித்தனர். முன்னனி நடிகையாக இருந்த போதிலும் அந்த சமயத்தில் ஒருவித பயத்துடனேயே வாழ்ந்தேன். எனது மனநிலை பற்றி யாரும் கவலைப்படவில்லை என்று கூறியுள்ளார்.

Share this story