“எனக்கு கொரோனாலா இல்லைங்க”… நடிகை அஞ்சலி பற்றி கிளம்பிய புரளி!

“எனக்கு கொரோனாலா இல்லைங்க”… நடிகை அஞ்சலி பற்றி கிளம்பிய புரளி!

நடிகை அஞ்சலி தான் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா இரண்டாவது அலை துவங்கி பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முக்கியமாக திரைத்துறை பிரபலங்கள். ஒரே நாளில் பல நடிகர், நடிகைகள் தாங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடிகை அஞ்சலி கொரோனாவால் பாதிக்கபட்டதாக பல செய்திகள் வெளியானது. தற்போது அஞ்சலி அந்த செய்திகளை மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “எனது நலம் விரும்பிகள், எனது நண்பர்கள் மற்றும் அன்பான ரசிகர்களிடம் நான் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சில செய்திகள்/ வலைத்தளங்கள் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்து வருகின்றனர். அது முற்றிலும் தவறானது. நான் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். பாதுகாப்பாக இருங்கள் மற்றும் கவனித்துக் கொள்ளுங்கள்.” என்று தெரிவித்துள்ளார். .

Share this story