உனக்கு அழகே அந்த ரெண்டும் தான்னு சொல்லுவாங்க… நடிகை அனுபமா ஓபன் டாக்!

உனக்கு அழகே அந்த ரெண்டும் தான்னு சொல்லுவாங்க… நடிகை அனுபமா ஓபன் டாக்!

மலையாளத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் ரசிர்கர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். அதனை தொடர்ந்து தமிழில்  கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் தள்ளிப் போகாதே படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துள்ளார்.

தவிர தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது தனது கியூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

உனக்கு அழகே அந்த ரெண்டும் தான்னு சொல்லுவாங்க… நடிகை அனுபமா ஓபன் டாக்!

தற்போது அனுபமா அளித்துள்ள பேட்டியில் நடிகைகளுக்கு மனவலிமை வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

“நடிகைகள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே அவர்கள் மன வலிமையோடு இருக்கவேண்டும். படங்கள் தோல்வியடைந்தால் என்ன செய்வாய் என்று என்னிடம் கேட்பவர்களிடம் எனது படிப்புக்கு ஏற்ற வேலையை பார்ப்பேன் என்று பதில் சொல்லி வருகிறேன்.

உனக்கு அழகே அந்த ரெண்டும் தான்னு சொல்லுவாங்க… நடிகை அனுபமா ஓபன் டாக்!

சினிமாவுக்கு வந்த புதிதில் ஒளிவு மறைவு இல்லாமல் பேட்டிகள் கொடுத்து சமூக வலைத்தளத்தில் விமர்சனத்துக்கு ஆளானேன். ரொம்ப அகங்காரம் பிடித்தவள் என்றும் பேசினர். இது வருத்தமாக இருந்ததால் மலையாளத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன். அப்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தேன். எனது கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனது தலைமுடி அடர்த்தியாக இருக்கும். தினமும் தேங்காய் எண்ணை தேய்க்கிறேன். நடிகைகள் மீது பொறாமை கிடையாது. சக நடிகைகள் நடிப்பு பிடித்து இருந்தால் போன் செய்து பாராட்டுவேன். 3 படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன். எதிர்காலத்தில் டைரக்டராவேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story