புது சீரியலில் நடிகை தேவயானி… விரைவில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது…

புது சீரியலில் நடிகை தேவயானி… விரைவில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது…

புதிய சீரியல் ஒன்றில் நடிகை தேவயானி நடிக்கவிருக்கிறார். இதற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

புது சீரியலில் நடிகை தேவயானி… விரைவில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது…

90-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தேவயானி. கவர்ச்சி என்ற விஷயத்தில் கண்டிப்பாக இருந்த தேவயானி, தனது அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். முன்னணி ஹீரோக்கள் விஜய், அஜீத், சரத்குமார் என அனைவருடனும் நடித்துள்ளார். இவர் நடித்த காதல் கோட்டை, நினைத்தேன் வந்தாய், ஃப்ரெண்ட்ஸ், சூர்யவம்சம் ஆகியப் படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன.

புது சீரியலில் நடிகை தேவயானி… விரைவில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது…

பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். சன் டிவி-யில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் கால்பதித்த அவருக்கு சினிமா போன்று சீரியலில் இல்லதரசிகளின் ஏகபோக வரவேற்பு இருந்தது. கோலங்கள் சீரியலில் வரும் இன்ட்ரோ பாடலுக்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்த சீரியலில் தீபா வெங்கட், அபிஷேக், ஈஸ்வரமூர்த்தி, திரு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நீண்ட நாள் ஒளிபரப்பான சீரியல் பட்டியலில் கோலங்கள் சீரியலுக்கும் பெரிய இடம் உண்டு.

புது சீரியலில் நடிகை தேவயானி… விரைவில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது…

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய சீரியலில் நடிகை தேவயானி நடிக்கவிருக்கிறார். இந்த சீரியலுக்கான பூஜை சமீபத்தில் நடந்தது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் கோலங்கள் சீரியலுக்கு பிறகு அபிஷேக் தேவயானியுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இந்த சீரியலுக்கான ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.

Share this story