பொய் செய்தியை நம்பவேண்டாம் – ஹன்சிகா பட இயக்குனர் வேதனை

பொய் செய்தியை நம்பவேண்டாம் – ஹன்சிகா பட இயக்குனர் வேதனை

ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்பது தவறான செய்தி என அந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பொய் செய்தியை நம்பவேண்டாம் – ஹன்சிகா பட இயக்குனர் வேதனை

இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ளது  ‘மஹா’.  இந்த படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இதோடு நடிகர் ஶ்ரீகாந்த்தும் இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

பொய் செய்தியை நம்பவேண்டாம் – ஹன்சிகா பட இயக்குனர் வேதனை

Etcetera Entertainment நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிக்கப்பட்டு தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. விரைவில் இந்த படத்தை படக்குழுவினர் வெளியிட உள்ளனர்.

பொய் செய்தியை நம்பவேண்டாம் – ஹன்சிகா பட இயக்குனர் வேதனை

இதையடுத்து கொரானா காலம் என்பதால் இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக செய்திகள் பரவின. இந்நிலையில் மஹா படம் ஓடிடியில் வெளியாகிறது என்பது முற்றிலும் பொய்யான செய்தி என அந்த படத்தின் இயக்குனர் ஜமீல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இது முற்றிலும் போலி செய்தி. சிம்பு ரசிகர்களின் உணர்வு என்ன என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நான்கு ஆண்டுகள் காத்திருத்திருந்த நீங்கள், சில நாட்கள் பொறுத்திருங்கள். விரைவில் அப்டேட் வரும் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share this story