சிரஞ்சீவியே மீண்டும் மகனாகப் பிறந்திருக்கிறார்… நடிகை மேக்னா ராஜிற்கு குழந்தை பிறந்தது!

சிரஞ்சீவியே மீண்டும் மகனாகப் பிறந்திருக்கிறார்… நடிகை மேக்னா ராஜிற்கு குழந்தை பிறந்தது!

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கன்னடத்தில் முன்னணி நடிகராக வளர்ந்து வந்தவர் சிரஞ்சீவி சார்ஜா. இவர் நடிகர் அர்ஜுனின் மருமகன் ஆவார். இவர் நடிகை மேக்னா ராஜை காதலித்து  2017 ல் திருமணம் செய்துகொண்டார். மேக்னா ராஜ் தமிழில் ’காதல் சொல்ல வந்தேன்’ படத்தில் நடித்துள்ளார்.

சிரஞ்சீவியே மீண்டும் மகனாகப் பிறந்திருக்கிறார்… நடிகை மேக்னா ராஜிற்கு குழந்தை பிறந்தது!

இந்நிலையில் நடிகை மேக்னா ராஜின் கணவர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஜூன் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு இந்திய திரையுலகமே இரங்கல் தெரிவித்தது.

இந்த மாத துவக்கத்தில் பெங்களூருவில் உள்ள வீட்டில் வைத்து நடிகை மேக்னாராஜிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் மறைந்த சிரஞ்சீவி சர்ஜாவின் ஆளுயர பேனரை அருகில் வைத்து , மேக்னா ராஜ் வளைகாப்பு கொண்டாடிய தருணங்கள் பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தின.

சிரஞ்சீவியே மீண்டும் மகனாகப் பிறந்திருக்கிறார்… நடிகை மேக்னா ராஜிற்கு குழந்தை பிறந்தது!

இந்நிலையில் இன்று மேக்னா ராஜிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிரஞ்சீவி சார்ஜாவின் புகைப்படத்திற்கு அருகில் குழந்தை இருக்கும் புகைப்படங்களும், துருவா சார்ஜா குழந்தையை தூக்கிக் கொஞ்சும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் மகனாகப் பிறந்திருக்கிறார் என்று அனைவரும் மேக்னா ராஜிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Image
Image

Share this story