பிக்பாஸ் சீசன் 5-ல் பிரபல டப்ஸ்மாஷ் நடிகையா ?…

பிக்பாஸ் சீசன் 5-ல் பிரபல டப்ஸ்மாஷ் நடிகையா ?…

பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துக்கொள்ள உள்ளதாக வந்த செய்திக்கு பிரபல டிக்டாக் நடிகை முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 5-ல் பிரபல டப்ஸ்மாஷ் நடிகையா ?…

விஜய் டிவியின் டாப் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தனது 5வது சீசனை தொடங்க உள்ளது. தமிழில் இதுவரை 4 சீசன்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ், நடிகை ரித்விகா, முகென் ராவ், நடிகர் ஆரி ஆகியோர் டைட்டில் வின்னராக தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது 5வது சீசன் வரும் ஜுன் மாதம் 3வது வாரத்தில் துவங்க உள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களை தேர்வு செய்ய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 5-ல் பிரபல டப்ஸ்மாஷ் நடிகையா ?…

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க நடிகர்கள் ராதாரவி, மன்சூர் அலிகான், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரையும், ‘குக் வித் கோமாளி’ போட்டியாளர்கள் கனி, சுனிதா, பவித்ரா, இனியன், விஜே வினோத், ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிலா ஆகிய சின்னத்திரை பிரபலங்களையும் ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5-ல் பிரபல டப்ஸ்மாஷ் நடிகையா ?…

இந்நிலையில் இந்த வரிசையில் டப்ஸ்மாஷ் மூலம் புகழ் பெற்ற நடிகை மிருணாளினி ரவி இணையவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பிக்பாஸ் முதல் சீசன் ஆரம்பித்தபோதே அழைப்பு வந்ததது. ஆனால் அந்த அழைப்பை ஏற்கவில்லை. ஒரு பார்வையாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியை ரொம்ப பிடிக்கும், மற்றபடி நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிரானவள் இல்லை என்று கூறியுள்ளார்.

Share this story