தடுப்பூசிப் போட்டுக்கொண்ட பிறகும் கொரானா… நடிகை நக்மா அதிர்ச்சி…

தடுப்பூசிப் போட்டுக்கொண்ட பிறகும் கொரானா… நடிகை நக்மா அதிர்ச்சி…

இரண்டாவது முறையாக கொரானா தொற்று பாதிக்கப்பட்டதால் நடிகை நக்மா அதிர்ச்சியடைந்துள்ளார்.

தடுப்பூசிப் போட்டுக்கொண்ட பிறகும் கொரானா… நடிகை நக்மா அதிர்ச்சி…

நாடு முழுவதும் கொரானா தொற்று பலமடங்கு வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல கட்டுபாடுகளை மீண்டும் மத்திய அரசு விதித்து வருகிறது. அதேநேரத்தில் கொரானா தடுப்பூசியும் போடப்பட்டு வருகின்றது. இதுவரை இந்தியா முழுவதும் 8 கோடிக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருந்தப்போதிலும் 2வது அலை வீசத்தொடங்கியதும் கொரானா முன்பைவிட அசுரவேகத்தில் செல்கிறது என்றுதான் கூறப்படுகிறது.

தடுப்பூசிப் போட்டுக்கொண்ட பிறகும் கொரானா… நடிகை நக்மா அதிர்ச்சி…

இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்து வருகின்றனர். முன்புபோல் சொந்த ஊரை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டனர். இதேபோன்று இந்திய சினிமாவின் தலைநகரமாக மும்பை இருந்து வருகிறது. பெரும்பாலான பாலிவுட் நடிகர், நடிகைகள் அங்குதான் வாழ்ந்து வருகின்றனர். தற்போது மகாராஷ்ரா மாநிலத்தில்தான் இந்தியாவிலேயே தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால் அங்குள்ள சினிமா பிரபலங்களையும் இந்த தொற்று பாதித்து வருகிறது.

தடுப்பூசிப் போட்டுக்கொண்ட பிறகும் கொரானா… நடிகை நக்மா அதிர்ச்சி…

இப்படி ஏற்கனவே அமீர் கான், மாதவன், அக்‌ஷய் குமார், ஆலியா பட், கத்ரீனா கைப் ஆகிய முன்னணி பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சிலர் சிகிச்சைப் பெற்று இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர். அந்தவகையில் பிரபல நடிகை நக்மாவும் இந்த தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சைப் பெற்று பூரண குணமடைந்தார். அதன்பிறகு கொரானா தடுப்பூசியும் போட்டுக்கொண்டார். இந்நிலையில் இவருக்கு மீண்டும் கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நடிகை நக்மா அதிர்ச்சியடைந்துள்ளார்.

Share this story