ரசிகரின் கிண்டல் கேள்வி… சாமர்த்தியமாக பதிலளித்த பிரியாமணி..

ரசிகரின் கிண்டல் கேள்வி… சாமர்த்தியமாக  பதிலளித்த பிரியாமணி..

‘என்னை திருமணம் செய்வீர்களா’ என ரசிகர் கேட்ட கேள்விக்கு அசத்தலான பதிலளித்துள்ளார் பிரியாமணி.

ரசிகரின் கிண்டல் கேள்வி… சாமர்த்தியமாக  பதிலளித்த பிரியாமணி..

’கண்களால் கைது செய்’ என்ற படத்தின் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதன்பிறகு அவர் ஒருசில தமிழ் படங்களில் நடித்து வந்தார். தமிழில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ரசிகரின் கிண்டல் கேள்வி… சாமர்த்தியமாக  பதிலளித்த பிரியாமணி..

மீண்டும் தமிழில் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தில் நடித்தார். இந்த படத்தில்தான் நடிகர் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமானார். கிராமத்து பின்னணி கொண்ட படமாக உருவான இப்படத்தில் கார்த்தி – பிரியாமணி ஆகிய இருவரும் தங்களது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் பிரியாமணி. இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

ரசிகரின் கிண்டல் கேள்வி… சாமர்த்தியமாக  பதிலளித்த பிரியாமணி..

தற்போது சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் பிரியாமணி, தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். அதுபோன்று ஒரு கவர்ச்சி புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தார் பிரியாமணி. இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளம் வாயிலாக பிரியாமணியிடம் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதில் ‘என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று பிரியாமணியிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், ’எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் என் கணவரிடம் அனுமதி கேளுங்கள், அவர் சம்மதம் என்று சொன்னால், நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று சாதுர்யமாக தெரிவித்துள்ளார். இந்த பதிலுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகிறது.


Share this story