பிறந்தநாளில் ட்விட்டர் கணக்கு தொடங்கிய பிரபல நடிகை

பிறந்தநாளில் ட்விட்டர் கணக்கு தொடங்கிய பிரபல நடிகை

தனது பிறந்தநாளையொட்டி புதிய ட்விட்டர் கணக்கு ஒன்றை நடிகை பிரியாமணி துவங்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் பிரியாமணி, ‘கண்களால் கைது செய்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன்பிறகு ஒருசில தமிழ் படங்களில் நடித்து வந்தார். தமிழில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பிறந்தநாளில் ட்விட்டர் கணக்கு தொடங்கிய பிரபல நடிகை

இதையடுத்து அமீர் இயக்கத்தில் வெளியான ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில்தான் நடிகர் கார்த்தியுடன் ஜோடியாக நடித்தார். கிராமத்து பின்னணி கொண்ட இப்படத்தில் பிரியாமணியின் நடிப்பு அசாத்தியமாக இருந்தது. இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் நடிகை பிரியாமணி. இந்நிலையில் நடிகை பிரியாமணி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி ட்விட்டரில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். இது குறித்து தனது புதிய ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், இது என்னுடைய ஸ்பெஷல் பிறந்தநாள். இன்று அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார் என்று பிரியாமணி தெரிவித்துள்ளார்.

Share this story