இதுவரை யாரையும் காதலித்தது இல்லை – நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்…

இதுவரை யாரையும் காதலித்தது இல்லை – நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்…

பொய்யான கிசுகிசுக்களுக்கு நான் அமைதி காத்து வந்ததால் என்னை பற்றி எந்த செய்தியும் வருவதில்லை என நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.  பெரும்பாலும் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தமிழில் ‘என்னமோ ஏதோ’ படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், கார்த்தியின் ‘தீரன் அதிகாரம்’ படத்தின் மூலம்தான் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதுவரை யாரையும் காதலித்தது இல்லை – நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்…

தொடர்ந்து தற்போது பாலிவுட் பிசியாக நடித்து வரும் இவர், நான்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதேபோன்று தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதோடு ‘இந்தியன் 2’ படமும் இவரின் கைவசம் உள்ளது. படத்தில் பிசியான இருந்தாலும், சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் மீது அவ்வெப்போது பல காதல் கிசுகிசுப்புகள் பரவி சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகும்.

இதுவரை யாரையும் காதலித்தது இல்லை – நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்…

இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். அதில் கடந்த சில வருடங்களாக இந்தி மற்றும் தெலுங்கு நடிகர்களுடன் இணைத்து பல கிசுகிசுக்கள் வெளியானது. அந்த செய்தியெல்லாம் பொய் என்பதால், அதற்கெல்லாம் பதில் அளிக்காமல் இருந்து வந்தேன். எல்லாவற்றிற்கும் அமைதி காத்து வந்ததால் ஒருகட்டத்தில் எந்த காதல் கிசுகிசுக்களும் வருவதில்லை. இப்போது நிம்மதியாக இருக்கிறேன். இதுவரை நான் யாரையும் காதலித்ததில்லை என்று கூறியுள்ளார்.

Share this story