“எந்த செயலும் நம்மிலிருந்து தொடங்கவேண்டும்”… புதிய சவாலை ஏற்குமாறு பெண்களுக்கு நடிகை சமந்தா வேண்டுகோள் !

“எந்த செயலும் நம்மிலிருந்து தொடங்கவேண்டும்”… புதிய சவாலை ஏற்குமாறு பெண்களுக்கு நடிகை சமந்தா வேண்டுகோள் !

சர்வதேச மகளிர் தினத்தில் புதிய சவாலை பெண்கள் ஏற்கவேண்டும் என்று நடிகை சமந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

“எந்த செயலும் நம்மிலிருந்து தொடங்கவேண்டும்”… புதிய சவாலை ஏற்குமாறு பெண்களுக்கு நடிகை சமந்தா வேண்டுகோள் !

ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். பெண்கள் சந்திக்கும் சவால்கள், இடர்பாடுகள் களைய இந்நாளை மகளிர் தினமாக பெண்கள் கொண்டாடுகின்றனர். ஆண்டுகளுக்கு நிகராக பெண்கள் செய்யும் சாதனைகளை எடுத்துரைக்கும் தினமாகவும் இத்தினம் இருக்கும்.

“எந்த செயலும் நம்மிலிருந்து தொடங்கவேண்டும்”… புதிய சவாலை ஏற்குமாறு பெண்களுக்கு நடிகை சமந்தா வேண்டுகோள் !

உலகம் முழுவதும் மகளிர் தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மகளிர் தினத்தில் புதிய சவால் ஒன்றை பெண்கள் ஏற்கவேண்டும் என்று கூறியுள்ளார். நம்மை நாமே எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்து பார்க்கவேண்டும். நம் மதிப்பை நாமே குறைத்து எடைப் போடக்கூடாது.

இந்த தினத்தில் நான் ஒரு சவாலை உறுதியேற்கவுள்ளார். அது என்னவென்றால், என்னை நானே நம்ப போகிறேன். நீங்களும் அதையே செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். எந்த செயலும் நம்மில் இருந்து தொடங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துக்கு பெண்கள் ஆதரவு தெரிவித்து லைக்ஸ் செய்து வருகின்றனர்.

Share this story