அதைப்பற்றி பேசாதிங்க… கடுப்பான நடிகை சுனைனா….

அதைப்பற்றி பேசாதிங்க… கடுப்பான நடிகை சுனைனா….

திருமணத்தை பற்றி பேச வேண்டாம் என நடிகை சுனைனா கோபமாக தெரிவித்துள்ளார்.

அதைப்பற்றி பேசாதிங்க… கடுப்பான நடிகை சுனைனா….

நடிகர் நகுல் நடித்த ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. தொடர்ந்து நீர் பறவை, வம்சம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். போதிய வாய்ப்புகள் இல்லாததால் தமிழ் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

அதைப்பற்றி பேசாதிங்க… கடுப்பான நடிகை சுனைனா….

அதன்பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படத்தில் சுனைனாவின் கதாபாத்திரம் பேசும்படியாக இருந்தது. இதையடுத்து யோகிபாபுவின் ‘டிரிப்’ படத்தில் நடித்தார். காமெடி கலாட்டாவில் உருவான இப்படத்திற்கும் நல்ல வரவேற்ப கிடைத்தது. இதுதவிர தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

அதைப்பற்றி பேசாதிங்க… கடுப்பான நடிகை சுனைனா….

இந்நிலையில் நடிகை சுனைனா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்., அதில் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது. வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வரும் அதேவேளையில் எனக்காக சில இயக்குனர்கள் கதை எழுதி வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் தான் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக தொடர்ந்து செய்திகள் வந்துக்கொண்டிருக்கிறது. இது முற்றிலும் தவறான தகவல் என கூறிய சுனைனா, தற்போது முழுவதுமாக திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். அதுதவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை என்று காட்டமாக கூறியுள்ளார்.

Share this story