முத்துப் பாண்டியின் சவாலை வெற்றிகரமாக செய்து முடித்த தனலட்சுமி!

முத்துப் பாண்டியின் சவாலை வெற்றிகரமாக செய்து முடித்த தனலட்சுமி!

நடிகர் பிரகாஷ்ராஜின் விடுத்த க்ரீன் இந்தியா சவாலை ஏற்று நடிகை த்ரிஷா மரங்கன்றுகள் நட்டு புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

Image

இந்தியாவைப் பசுமையாக்க ‘க்ரீன் இந்தியா’ என்ற பெயரில் சேலஞ்ச் ஒன்றை தெலுங்கானா அமைச்சர் சந்தோஷ் குமார் துவக்கினார். பின்னர் திரையுலக பிரபலங்கள் பலர் இந்த க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர். முதலில் சமந்தா, மாமனார் நாகர்ஜுனாவுடன் மரங்கன்று நட்ட புகைப்படத்தை வெளியிட்டார். பின்னர் தெலுங்கு ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு, விஜய், ராணா, ஸ்ருதி ஹாசன் என பல பிரபலங்கள் ஆகியோர் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று மரக்கன்றுகள் நட்டுள்ளனர்.

அதையடுத்து நடிகர் பிரகாஷ் ராஜும் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று மரக்கன்றுகள் நட்டு புகைப்படங்கள் வெளியிட்டார். மேலும் த்ரிஷா, மோகன்லால், சூர்யா, ரக்ஷித் ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரையும் இந்த சவாலை ஏற்க பரிந்துரை செய்தார்.

தற்போது நடிகை த்ரிஷா, பிரகாஷ் ராஜ் விடுத்த சவாலை ஏற்று இரண்டு மரக்கன்றுகள் நட்டு புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

” நான் க்ரீன் இந்தியா சவாலை ஏற்றுக்கொண்டு இன்று இரண்டு மரக்கன்றுகளை நட்டேன். நீங்கள் அனைவரும் உங்கள் பங்கைச் செய்து பசுமையான இந்தியாவை நோக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

Share this story