நடிகை சரண்யா மகளுக்கு நிச்சயதார்தம்… வாழ்த்தும் திரையுலகம்!

நடிகை சரண்யா மகளுக்கு நிச்சயதார்தம்… வாழ்த்தும் திரையுலகம்!

நடிகை சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நிச்சயதார்தம் நடந்துள்ளது. இதற்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகை சரண்யா மகளுக்கு நிச்சயதார்தம்… வாழ்த்தும் திரையுலகம்!

கமல் நடித்து மெகாஹிட் பெற்ற திரைப்படம் ‘நாயகன்’. இதில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் சரண்யா. ஹீரோயினாக நடித்த முதல் படத்திலேயே நல்ல பெயர் கிடைத்தது. இதையடுத்து தொடர்ந்து நடித்து வந்த அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

நடிகை சரண்யா மகளுக்கு நிச்சயதார்தம்… வாழ்த்தும் திரையுலகம்!

இதையடுத்து தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் அம்மாவாக அறிமுகமானார். ஒரு அம்மாவுக்கும், மகனுக்கும் உள்ள அன்பை ஜனரஞ்சமாக நடித்து காட்டியிருப்பார் சரண்யா. இந்த படத்திற்கு பிறகு அம்மானா அது சரண்யா தான் என்ற அளவுக்கு மாறிவிட்டது. இந்த படத்தின் மூலம் ரியல் அம்மாக்கள் சரண்யாவுக்கு தீவிர ரசிகைகளாக மாறிவிட்டனர். தொடர்ந்து அவர் அம்மா கேரக்டர்லயே நடித்து வருகிறார்.

நடிகை சரண்யா மகளுக்கு நிச்சயதார்தம்… வாழ்த்தும் திரையுலகம்!

இதனிடையே சரண்யா, இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

நடிகை சரண்யா மகளுக்கு நிச்சயதார்தம்… வாழ்த்தும் திரையுலகம்!

இந்த நிலையில் பொன்வண்ணன் – சரண்யா தம்பதியினரின் மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு சமீபத்தில் நிச்சயதார்தம் நடைபெற்றது. கொரோனா காலம் என்பதால் நெருங்கிய உறவுகள் மட்டும் கலந்துகொண்டு வாழ்த்தினர். இந்த படங்கள் தற்போது இணையதளங்களில் உலா வருகிறது.  

Share this story