“எதற்காகவும் வருத்தப்படமாட்டேன்” – நடிகை அதிதி ராவ்

“எதற்காகவும் வருத்தப்படமாட்டேன்” – நடிகை அதிதி ராவ்

எந்த விஷயத்தையும் மனதில் வைத்துக்கொள்ளவோ, அதையே நினைத்து கவலைப்படவோ மாட்டேன் என நடிகை அதிதி ராவ் தெரிவித்துள்ளார்.

“எதற்காகவும் வருத்தப்படமாட்டேன்” – நடிகை அதிதி ராவ்

மலையாளம், தெலுங்கு, மராத்தி என பல மொழிப்படங்களில் நடித்து வருபவர் அதிதி ராவ். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து இரண்டாவது முறையாக மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்திலும் நடித்தார்.

 

“எதற்காகவும் வருத்தப்படமாட்டேன்” – நடிகை அதிதி ராவ்

பின்னர் மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் அதிதி ராவ். தொடர்ந்து பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

“எதற்காகவும் வருத்தப்படமாட்டேன்” – நடிகை அதிதி ராவ்

இந்நிலையில் அதிதிராவ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ஒரு படத்தில் நான் நடிக்கும் போது அந்த படம் முழுவதும் நானே இருக்கவேண்டும் என்று நினைக்கமாட்டேன். ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு சென்றாலும் என்னுடைய கேரக்டர் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதியவேண்டும். கடினமாக பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவே ஆசைப்படுகிறேன். விமர்சனங்களை கண்டுகொள்ளமட்டேன் என்றும், அதற்காக வருத்தமோ, கவலையோ படமாட்டேன் என்று கூறியுள்ளார்.

Share this story