என்னை அறிந்தால் படத்திற்குப் பிறகு இது தான் எனது சிறந்த படம்: அக்னி நட்சத்திரம் குறித்து அருண் விஜய்!

என்னை அறிந்தால் படத்திற்குப் பிறகு இது தான் எனது சிறந்த படம்: அக்னி நட்சத்திரம் குறித்து அருண் விஜய்!

சினிமாவில் போராடி வென்ற பல நடிகர்களில் முக்கியமானவர் அருண் விஜய். சினிமா தனக்கு வழங்கிய இரண்டாவது வாய்ப்பை அழகாக பயன்படுத்திக் கொண்டவர்.

25 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நுழைந்த அருண்விஜய் சில படங்கள் மூலம் தனது இருப்பைத் தொடர்ந்து வந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒதுங்கினார். தனக்கான சரியான வாய்ப்பிற்காகக் காத்திருந்த அருண் விஜய்க்கு ‘என்னை அறிந்தால்’ படம் மிரட்டலான ரீஎன்ட்ரி கொடுத்து மறுபடியும் கோலிவுட்டில் மீண்டெழச் செய்தது. அந்தப் படத்திற்கு பிறகு தான் அவரது இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்தது என்றே சொல்லலாம்.

என்னை அறிந்தால் படத்திற்குப் பிறகு இது தான் எனது சிறந்த படம்: அக்னி நட்சத்திரம் குறித்து அருண் விஜய்!

அருண் விஜய் தற்போது ‘அக்னி நட்சத்திரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘மூடர் கூடம்’ படத்தின் இயக்குனர் நவீன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

என்னை அறிந்தால் படத்திற்குப் பிறகு தனக்கு நெருக்கமான படம் அக்னி நட்சத்திரம் தான் என்று அருண் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “அக்னி சிறகுகள் படத்திலிருந்து ‘ரஞ்சித்’ கதாபாத்திரம் தான், என்னை அறிந்தால் படத்தின் ‘விக்டர்’ கதாபாத்திரத்திற்கு பிறகு எனக்கு மிகவும் நெருக்கமான படம். அதில் நடித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்களும் அதைப் பார்க்க வேண்டும் என்று மிக ஆவலாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story