தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றதை அடுத்து தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கலைத் துறை மற்றும் இலக்கியத் துறையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது அளித்து கவுரவப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு விருது பெற்றவர்களின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது.

தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், கௌதம் மேனன், டி இமான், கலைப்புலி எஸ் தானு உள்ளிட்ட பலர் கலைமாமணி விருது பெற்றனர். சிவகார்த்திகேயன் தனது விருதை அவரது அம்மாவுக்கு அர்ப்பணித்தார்.

தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் கலைமாமணி விருது பெற்றதிற்காக தமிழக அரசு மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “கலைமாமணி என்ற கவுரவ விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பனீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, மாபா பாண்டியன் ஆகியோருக்கும் இயல் இசை நாடகக் குழுவிற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது பயணத்தில் இன்னும் பல வெற்றிகளை அடைய இது எனக்கு உத்வேகமூட்டியுள்ளது. சிறப்பான ஆதரவளித்த அனைவர்க்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Share this story