இனிமே ரோடு சரிப்பட்டு வராது… ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த சாதுர்ய முடிவு!

இனிமே ரோடு சரிப்பட்டு வராது…  ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த சாதுர்ய முடிவு!

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் சென்னையில் இருந்து 350 கி.மீ தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ வேகத்திலும் வீசி மக்களை சுழட்டி சுழட்டி அடித்து வருகிறது. புயலால் வீசிய காற்றில் மரங்கள் விழுந்து போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில், மழைநீர்தெப்பக்குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஹைதராபாத் செல்ல வேண்டி காரில் விமான நிலையம் சென்றுள்ளார். மழை வெள்ளத்தால் ஏற்பட்ட ட்ராபிக் நெரிசலில் கார் அவரது மாட்டிகொண்டது. இது சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்து மெட்ரோ ட்ரெயின் மூலம் விமான நிலையம் சென்றுள்ளார்.

இனிமே ரோடு சரிப்பட்டு வராது…  ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த சாதுர்ய முடிவு!

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் தொடர்ந்து மெட்ரோவில் பயணிக்க அவரை வலியுறுத்தி வருகின்றனர்.

Share this story