கூடிய ரசிகர்கள், ஓடிய அஜித்… மீண்டும் ஒரு ரைபிள் கிளப் சம்பவம்!

கூடிய ரசிகர்கள், ஓடிய அஜித்… மீண்டும் ஒரு ரைபிள் கிளப் சம்பவம்!

சென்னை ரைபிள் கிளப் சென்ற அஜித் அங்கு ரசிகர்கள் குழுமியதால் பாதியில் அங்கிருந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் அஜித் பொதுவெளியில் மிகவும் அரிதாகவே காணப்படுவார். ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிவிடும் என்பதால் பெரும்பாலும் பொது வெளியில் வருவதைத் தவிர்த்து வருகிறார் அஜித்.

கூடிய ரசிகர்கள், ஓடிய அஜித்… மீண்டும் ஒரு ரைபிள் கிளப் சம்பவம்!

இந்நிலையில் அஜித் சில தினங்களுக்கு முன்பு ரைபிள் செல்வதற்கு பதிலாக கமிஷனர் அலுவலகம் சென்றதால் அங்கு ரசிகர்கள் கூட்டமாகக் கூடினர். அஜித் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

தற்போது அஜித் தேசிய அளவிலான துப்பாக்கிச் சூடு போட்டியில் கலந்துகொள்வதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். இதனால் ரைபிள் கிளப் அடிக்கடி சென்று வருகிறார்.

கூடிய ரசிகர்கள், ஓடிய அஜித்… மீண்டும் ஒரு ரைபிள் கிளப் சம்பவம்!

இன்றும் அஜித் எழும்பூரில் உள்ள ரைபிள் கிளப்பிற்கு பயிற்சிக்காக சென்றுள்ளார். வழக்கம் போல அங்கும் ரசிகர்கள் அதிகளவில் கூடியுள்ளனர். இதனால் அஜித் பயிற்சியை முடிக்காமல் பாதியிலே அங்கிருந்து சென்றுள்ளார்.

அஜித்தின் நடவடிக்கைகளை அவரது ரசிகர்கள் கன் மாதிரி கண்காணித்து வருகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்.

Share this story