கே.ஜி.எப் இயக்குனரின் பிரம்மாண்ட படத்தில் விஜய் சேதுபதி!
கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் பிரம்மாண்ட படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎப் படத்திற்கு பிறகு இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கி வரும் திரைப்படம் ‘சலார்’. பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், கன்னட நடிகர் மது குருசாமி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தை முடித்து ஜூனியர் என்.டி.ஆரை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல். தற்போது ஜூனியர் என்.டி.ஆர், ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து பிரசாந்த் நீலுடன் இணைவார் என தெரிகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதற்கிடையே தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கிலும் புகழ்பெற்று வருகிறார் விஜய் சேதுபதி. ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ‘உப்பென்னா’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடித்து தெலுங்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் நீல் – ஜூனியர் என்.டி.ஆர் இணையும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.