கே.ஜி.எப் இயக்குனருடன் ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

prashanth-neel-and-jr-ntr

பிரசாந்த் நீல் மற்றும் ஜூனியர் என்டிஆர் கூட்டணி அமைக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று ஜூனியர் என்டிஆர் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அதையடுத்து ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் அவருக்கு றந்தநாள் வாழ்த்துக்களை புரிந்து வருகின்றனர்.

ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் ஜூனியர் என்டிஆரின் அடுத்தடுத்த படங்களுக்கு  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு கொரட்டலா சிவா உடன் அவர் இணையும் படத்தின் அறிவிப்பு நேற்று வெளியாகியது.

jr NTR

இந்நிலையில் தற்போது கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இருவரும் கூட்டணி அமைக்க இருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தெரிவிக்கப்பட்டு வந்தது. ஜூனியர் என்டிஆர் 31வது படமாக உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் இரு நிறுவங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். 


பிறந்தநாள் வாழ்த்துக்கள் உடன் அசத்தலான போஸ்டரும் வெளியாகி உள்ளது. அதில் ஜூனிட்டார் என்டிஆர் பார்ப்பதற்கு வெறித்தனமாக காணப்படுகிறார். ரத்தத்தில் நனைந்த நிலங்கள் மட்டுமே வரலாறாக  நினைவு கூற மதிப்புடையது. அவனுடைய மண் அவளுடைய ராஜ்யம். ஆனால் சிந்தியது அவனுடைய ரத்தம் அல்ல" என்ற வசனமும் இடம் பெற்றுள்ளது 

கேஜிஎப் படத்தைப் போலவே நிலம் சார்ந்த அடிப்படையாக கொண்ட படமாக இருக்கும் என்று தெரிகிறது. 

Share this story