காட்டுக்குள் நடக்கும் புஷ்பா படப்பிடிப்பு !
1604945007000
தெலுங்கு பட நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்க இருக்கும் ‘புஷ்பா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது.
தமிழ் கன்னடம் மலையாளம் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை சுகுமார் இயக்குகிறார்.
கொரோனா காலகட்டத்தால் தள்ளிப்போன இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள மரேதுமில்லி காடுகளில் நடக்க உள்ளது.
இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.