கொரோனா பாதிப்பை அடுத்து அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள ஸ்பெஷல் அப்டேட்!

கொரோனா பாதிப்பை அடுத்து அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள ஸ்பெஷல் அப்டேட்!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது உடல்நிலை குறித்த அப்டேட் வெளியிட்டுள்ளார்.

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் சில நாட்களுக்கு முன்பு தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தனது சமூக வலைத்தள கணக்கு மூலமாக இதைத் தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பை அடுத்து அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள ஸ்பெஷல் அப்டேட்!

அதையடுத்து அவர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்தனர். தற்போது அல்லு அர்ஜுன் மீண்டும் உடல்நிலை குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

“எல்லோருக்கும் வணக்கம்! எனக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளது. தற்போது நலமாக இருக்கிறேன். விரைவாக குணமடைந்து வருகிறேன். மற்றும் கவலைப்பட ஒன்றுமில்லை. நான் இன்னும் தனிமைப்படுத்தலில் தான் இருக்கிறேன். நீங்கள் காட்டிய அனைத்து அன்பிற்கும், எனக்காக நீங்கள் அனுப்பிய பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார். ரஷ்மிகா மந்தான்னா கதாநாயகியாக நடிக்கிறார். பரபரப்பாக நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு அல்லு அர்ஜுனுக்கு கொரோனா ஏற்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் குணமான பிறகு படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story