கொரோனாவிலிருந்து மீண்ட அல்லு அர்ஜுன்!

கொரோனாவிலிருந்து மீண்ட அல்லு அர்ஜுன்!

நடிகர் அல்லு அர்ஜுன் தான் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தனது சமூக வலைத்தள கணக்கு மூலமாகத் தெரிவித்தார்.

கொரோனாவிலிருந்து மீண்ட அல்லு அர்ஜுன்!

அல்லு அர்ஜுன் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெலுங்கு திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து அவர் விரைவில் குணம் பெற அவரது ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்தனர். தற்போது வரை தனிமையில் இருந்து வந்த அல்லு அர்ஜுன் தான் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“எல்லோருக்கும் வணக்கம்! தனிமைப்படுத்தப்பட்ட 15 நாட்களுக்குப் பிறகு கொரோனாவிலுருந்து மீண்டுள்ளேன். எனக்கு கிடைத்த நல்வாழ்த்துக்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரிடமிருந்தும் கிடைத்த வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த லாக்டவுனைக் கடைபிடிப்பது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விரும்பும். வீட்டில் இருங்கள் & பாதுகாப்பாக இருங்கள். அனைத்து அன்பிற்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story