அமைதிப்படைக்கு பின்னர் இந்தப் படம் தான்… முழு அரசியல் களத்தில் குதித்த அமீர் 

அமைதிப்படைக்கு பின்னர் இந்தப் படம் தான்… முழு அரசியல் களத்தில் குதித்த அமீர் 

சுந்தர் சி நடிப்பில் vz துரை இயக்கிய ‘இருட்டு’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படத்திற்க்குப் பின்னர் vz துரை  இயக்குனர் அமீரை வைத்து ‘நாற்காலி’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
அமைதிப்படைக்கு பின்னர் இந்தப் படம் தான்… முழு அரசியல் களத்தில் குதித்த அமீர் 
இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமான  அமீர் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற சிறந்த  படங்களைக் கொடுத்தார். பின்னர் யோகி, வடசென்னை ஆகிய  படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது நாற்காலி படத்தில் கதாநாயகனாக அமீர் நடிக்கிறார். சாந்தினி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சுப்ரமணிய சிவா, இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
அமைதிப்படைக்கு பின்னர் இந்தப் படம் தான்… முழு அரசியல் களத்தில் குதித்த அமீர் 
மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்து பெரும் வெற்றி பெற்ற ‘அமைதிப்படை’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க அரசியல் படமாக இந்த படம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப் படத்திற்கு வித்யாசாகர்இசையமைத்துள்ளார்.

Share this story