ஒளிகளில் மாயாஜாலம் காட்டும் புகைப்பட வித்தகர்… பிரசன்னா வெங்கடேஷ்!

ஒளிகளில் மாயாஜாலம் காட்டும் புகைப்பட வித்தகர்… பிரசன்னா வெங்கடேஷ்!

புகைப்படக் கலைஞர் பிரசன்னா வெங்கடேஷ் கோலிவுட் வட்டாரத்தில் மிகவும் பிரபலமானவர். தொழில்முறை புகைப்படக்கலைஞராக பணிபுரியும் இவர் பல திறமைமிக்க புகைப்படகலை வல்லுநர்களை உருவாக்கி வருகிறார். Godox மற்றும் Hollyland Technology என்ற இரு நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார்.
ஒளிகளில் மாயாஜாலம் காட்டும் புகைப்பட வித்தகர்… பிரசன்னா வெங்கடேஷ்!
 
எம்பிஏ படித்து முடித்த பின்னர் ஒரு முன்னணி விளம்பர நிறுவனத்தில் கிளையன்ட் சர்வீசிங் எக்ஸிகியூட்டிவாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் பிரசன்னா. 2000-ம் ஆண்டு தான் பார்த்த வேலையைவிட்டு தனது ஃபேஷனை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார். பின்னர் முழுநேர புகைப்படக் கலைஞராக மாறிவிட்டார்.
ஒளிகளில் மாயாஜாலம் காட்டும் புகைப்பட வித்தகர்… பிரசன்னா வெங்கடேஷ்!
பிரசன்னா வெங்கடேஷ் தன் தொழில் மீது எவ்வளவு காதல் கொண்டவர் என்பது அவரின் புகைப்படங்களின் நேர்த்தியைப் பார்க்கும் போதே தெரியும். தற்போது, ​இவர் இந்தியாவில் உள்ள முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இவர் ஆஸ்தான போட்டோகிராபர். இளையராஜா, கே.ஜே.யேசுதாஸ் போன்ற பிரபலங்களுக்கு மிகவும் பிடித்த போட்டோகிராபரும் இவர் தான்.
ஒளிகளில் மாயாஜாலம் காட்டும் புகைப்பட வித்தகர்… பிரசன்னா வெங்கடேஷ்!
ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார்ஸ், மஹிந்திரா வாலம் ஷிப்பிங் இன்டர்நேஷனல், எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்ட், ஹோண்டா, அசோக் லேலண்ட், டயமண்ட் செயின்ஸ், சென்னை கார்ப்பரேஷன் போன்ற மிகப்பெரிய சர்வதேச நிறுவனங்களுடன் இவர் வேலை செய்துள்ளார்.
16 செப்டம்பர் 2013-ல் பிரசன்னாவின் புகைப்படங்களில் ஒன்று நேஷனல் ஜியோகிராஃபிக் யுவர் ஷாட்ஸ் டெய்லி டசனில் இடம்பெற்றது. ஒரு புகைப்பட கலைஞருக்கு இது உண்மையான சாதனை தான்!
ஒளிகளில் மாயாஜாலம் காட்டும் புகைப்பட வித்தகர்… பிரசன்னா வெங்கடேஷ்!
பிரசன்னா இதுவரை பல பிரபலங்களை மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் போட்டோஷூட் செய்துள்ளார். ஐஸ்வர்யா தத்தா மற்றும் சமீபத்தில் யாஷிகா ஆனந்தை வைத்து நடத்திய போட்டோஷூட்கள் சோசியல் மீடியாக்களில் மிகவும் பிரபலமானது.

 

Share this story