இப்போதைக்கு ‘அண்ணாத்த’ வேணாம்… கண்டிப்பாக சொல்லிய ‘ரஜினி’

இப்போதைக்கு ‘அண்ணாத்த’ வேணாம்… கண்டிப்பாக சொல்லிய ‘ரஜினி’

தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்வது என்று ரஜினி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்போதைக்கு ‘அண்ணாத்த’ வேணாம்… கண்டிப்பாக சொல்லிய ‘ரஜினி’

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. கொரானாவால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு கடந்த மாதம் 14ம் தேதி மீண்டும் துவங்கப்பட்டது. படப்பிடிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

இப்போதைக்கு ‘அண்ணாத்த’ வேணாம்… கண்டிப்பாக சொல்லிய ‘ரஜினி’

படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வந்தநிலையில், தினமும் 14 மணிநேரம் வேலை செய்து வந்தார். இந்நிலையில் படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தினார்கள். அப்பொழுது அவருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்படவே அங்கிருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.ரத்த அழுத்தம் சீரான பிறகு ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இப்போதைக்கு ‘அண்ணாத்த’ வேணாம்… கண்டிப்பாக சொல்லிய ‘ரஜினி’

அதன் பிறகு சென்னை திரும்பிய அவர், தான் கட்சி துவங்கவில்லை என்று அறிவிப்பு வெளியிட்டார். அண்ணாத்த படப்பிடிப்புக்கு என்னவாகும் என்கிற கேள்வி எழுந்தது. அண்ணாத்த படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்வது என்று ரஜினி முடிவு செய்துள்ளாராம்.

இப்போதைக்கு ‘அண்ணாத்த’ வேணாம்… கண்டிப்பாக சொல்லிய ‘ரஜினி’

ரஜினி தொடர்பான காட்சிகள் தான் அதிகம் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. அதனால் அவர் இல்லாமல் படப்பிடிப்பை நடத்த முடியாது. எனவே ஜூன் அல்லது ஜூலையில் மீண்டும் படப்பிடிப்பை துவங்குவார்களாம். இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

Share this story