ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது – அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை…

ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது – அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை…

‘அண்ணாத்த’ படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற ரஜினி, ரத்த அழுத்த பிரச்னை காரணமாக அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது – அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை…

ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட செய்தி வெளியான உடன் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் உடல்நிலை குறித்து தற்போது அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “ரஜினிகாந்தின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க சரியான அளவு மருந்துகள் தரப்படுகின்றன. அவர் இன்றிரவு மருத்துவமனையில் இருப்பார். நாளை மேற்கொண்டு அவரது ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று பார்க்கப்படும். அவர் ஆரோக்கியமாக, ஓய்வில் இருக்கிறார்.

ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது – அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை…

யாரும் அவரைப் பார்க்க அனுமதி இல்லையென்பதால் யாரும் அவரைப் பார்க்க வர வேண்டாம் என குடும்பத்தினரும், சிகிச்சை செய்யும் மருத்துவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். அவரது மகள் அவரோடு இருந்து கவனித்துக்கொள்கிறார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this story