தேகமெங்கும் ‘தல’யென வாழ்ந்த வெறித்தனமான ரசிகர் தற்கொலை… கண்ணீர் மழையில் அஜித் ரசிகர்கள்!

தேகமெங்கும் ‘தல’யென வாழ்ந்த வெறித்தனமான ரசிகர் தற்கொலை… கண்ணீர் மழையில் அஜித் ரசிகர்கள்!

அஜித்தின் தீவிர ரசிகரான பிரகாஷ் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகமாகி வருவதைப் போல ரசிகர்களும் தங்கள் வாழவை முடித்துக்கொள்ளும் விபரீத முடிவை எடுப்பதை நாம் அடிக்கடி பார்க்கமுடிகிறது.

தேகமெங்கும் ‘தல’யென வாழ்ந்த வெறித்தனமான ரசிகர் தற்கொலை… கண்ணீர் மழையில் அஜித் ரசிகர்கள்!

சில மாதங்களுக்கு முன்பு விஜயின் தீவிர ரசிகர் பாலா என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடிகர் யாஷின் ரசிகர் ஒருவர் “யாஷ் தனது இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள வேண்டும். இது எனது இறுதி ஆசை” என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தற்போது நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான பிரகாஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் தன் உடல் முழுவதும் அஜித்தைப் பற்றி தான் பச்சை குத்தியுள்ளார்.

“என் தாய் என்னை பத்து மாதம் சுமந்தாள்
தாயைபோல தலஎன்பதால் ஆயுள் முழுக்க
என் அண்ணனை நான் சுமக்கின்றேன்என்றும்
விஸ்வாசமாக தல பிரகாஷ்” என்று அவர் வெளியிட்டுள்ள பதிவு அவர் அஜித் மேல் கொண்ட பாசத்தை வெளிப்படுத்துகிறது.

தேகமெங்கும் ‘தல’யென வாழ்ந்த வெறித்தனமான ரசிகர் தற்கொலை… கண்ணீர் மழையில் அஜித் ரசிகர்கள்!

தற்போது #RIPPraksh என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. பிரகாஷின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. பிரகாஷின் தற்கொலை அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமது பொதுமக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this story