இந்தமுறை டைட்டில் வின்னர் ‘ஆரி’…ஆரூடம் கூறும் பிக்பாஸ் நடிகை

இந்தமுறை டைட்டில் வின்னர் ‘ஆரி’…ஆரூடம் கூறும் பிக்பாஸ் நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வதுசீசன் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தமுறை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொருவரும் வெளியேறி வந்தனர்.

இந்தமுறை டைட்டில் வின்னர் ‘ஆரி’…ஆரூடம் கூறும் பிக்பாஸ் நடிகை

இந்த வாரம் முழுக்க ஆரி – பாலாஜி இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து போட்டியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் பாலாஜியின் தவறுகளை சுட்டிக்காட்டினார்.

அதே வேளையில் சக போட்டியாளர்கள் வைக்கும் சிறு சிறு விஷயங்களை திருத்திக் கொள்ளலாமே என்றும் ஆரிக்கு அறிவுரை வழங்கினார் கமல்.

இந்தமுறை டைட்டில் வின்னர் ‘ஆரி’…ஆரூடம் கூறும் பிக்பாஸ் நடிகை

ஆரி – பாலாஜி இருவரிடையேயான மோதலைப் பார்த்த பார்வையாளர்கள் சிலர் ஆரிக்கு ஆதரவாகவும், ஒரு சிலர் பாலாஜிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான ரேஷ்மா பசுபுலெட்டி தான் ஆரிக்கு ஆதரவாக இருப்பதாகவும், அவர் டைட்டிலை வெல்வார் என்றும் கூறியுள்ளார். நடிகை ரேஷ்மா, சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Share this story