ஓடிடி ரிலீசுக்குத் தயாராகும் அருண் விஜயின் ‘பார்டர்’!?

ஓடிடி ரிலீசுக்குத் தயாராகும் அருண் விஜயின் ‘பார்டர்’!?

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்டர்’ திரைப்படம் ஓடிடி ரிலீஸுக்குத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

‘குற்றம் 23’ படத்தின்வெற்றியை அடுத்து அறிவழகன்- அருண் விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக பார்டர் படத்தின் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்டெபி படேல் நடித்துள்ளார். ரெஜினா காசான்ட்ராவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

ஓடிடி ரிலீசுக்குத் தயாராகும் அருண் விஜயின் ‘பார்டர்’!?

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சென்னையின் மிகப்பெரிய ஹோட்டலின் வெளியே வெளியிடப்பட்டு கவனம் ஈர்த்தது. அதையடுத்து இந்தப் படத்திற்கு கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


லாக்டவுன் காரணமாக அனைத்து படங்களும் ஓடிடி-யை நோக்கி படையெடுத்து வருகின்றன. தற்போது பார்டர் திரைப்படத்தை ஓடிடி-யில் வெளியிட படத்தின் தயாரிப்பாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story