மீண்டும் இணையும் அசோக் செல்வன் – வாணி போஜன் ஜோடி!

மீண்டும் இணையும் அசோக் செல்வன் – வாணி போஜன் ஜோடி!

நடிகர் அசோக் செல்வன் மற்றும் வாணி போஜன் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் அசோக் செல்வன், ரித்திகா சிங் , வாணி போஜன் நடிப்பில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான ‘ஓ மை கடவுளே‘ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி அடைந்தது.

அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதியும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் ரீமேக் ஆகிறது.

மீண்டும் இணையும் அசோக் செல்வன் – வாணி போஜன் ஜோடி!

இந்தப் படத்தில் அசோக் செல்வனுக்கும், வாணி போஜனுக்கு இடையே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது. இவர்கள் சேர்ந்து வரும் பகுதிகளுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் வாணி போஜன், அசோ செல்வன் ஜோடி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட் என்பவர் இயக்கவுள்ளார். இவர் இயக்குனர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் அசோக் செல்வன் நடித்துள்ள ‘தீனி’ படம் விரைவில் வெளியாக உள்ளது. வாணி போஜன் விக்ரம் பிரபுவுடன் நடித்துள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படமும் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

Share this story